அதிர வைக்கும் அதிரம்பாக்கம்! மானுட வரலாற்றில் முக்கியப் புள்ளி!
ஆரிய மாயைத் துடைத்தழிக்கும் ஆய்வு!
#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை
அதிரம்பாக்கம் என்பது சென்னையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள ஓர் ஊர். அங்கே செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இனம்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் தொன்மை குடிகள் என்ற கதை மேலும் மேலும் அடிவாங்குகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொன்மை மனித இனத்தினர் வெளியேறினார்கள் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அதிரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்லாயுதங்கள் 3 லட்சத்து 85 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை!
மனித வரலாற்றின் வளர்ச்சிப் போக்கைப் படிப்பது மிகவும் சிக்கலான ஒன்று. மரபணுவியல், மானுடவியல், தொல் பொருள் இயல் உள்ளிட்ட ஆய்வுகள் அதற்குத் தேவையானவையாக இருக்கின்றன. அதிரம்பாக்கத்தில் கிடைத்த கல்லாயுதங்கள் அதிநவீன கால நிர்ணய முறைகளின் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
தொல் மானுடர்கள் எளிய கல்லாயுதங்களைச் செய்திருக்கின்றனர். ஆனால், அரூபமான முறையில் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்போது மிகவும் மேம்பட்ட கல்லாயுதங்கள் செய்யப்பட்டன. அதிரம்பாக்கத்தில் கிடைத்த ஆயுதங்கள் மிகவும் மேம்பட்டவையாக இருந்தன. அது அந்த மனிதர்களின் மேம்பட்ட சிந்தனைத் திறனைக் காட்டுகிறது.
அதிரம்பாக்கத்தில், 385,000 ஆண்டுகள் துவங்கி 1 லட்சத்து 72 ஆயிரம் ஆண்டுகள் வரையிலான கல்லாயுதங்கள் கிடைத்திருக்கின்றன.
இந்தியத் துணைக் கண்டம் (இந்தியா என்று இன்று அறியப்படுவதல்ல), யூரேசியாவில் உள்ள ஜார்ஜியாவிற்கும் (மிகப் பழைய மனித மண்டையோடு கிடைத்த இடம்) தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையில் உள்ள பகுதியாக இருக்கிறது. இப்பிராந்தியத்தில் மிகப் பண்டைய மானுட வரலாற்றுத் தடயங்கள் கிடைத்துள்ள.
எனவே, அதிரம்பாக்கம் என்று இன்று அறியப்படும் இடம், மனிதர்கள் உருவானது, பரவியதற்கான, அவர்களின் தொழில்நுட்பங்கள் பரவியதற்கான ஓர் புள்ளியாக இருந்திருக்கக் வேண்டும்.
அதிரம்பாக்கத்தில் தொல்லியல் ஆய்வு 1999ல் துவங்கியது. தற்போதைய ஆய்வின் பிரதான நோக்கம் உலகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது. அதிலும் குறிப்பாக, மானுடத்தின் தோற்றம் பரிணாமம் பற்றியது.
இதனைச் சாதிப்பதற்காக 7 ஆயிரம் கல்லாயுதங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. luminescence dating என்ற அதி நவீன முறையின் படி அவை ஆய்வு செய்யப்பட்டன.
அந்த ஆய்வு முடிவுகளின்படி, குறைந்தது 1 லட்சத்து 72 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது தற்போது நம்பப்படுவதைவிட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் இருந்து மனித மூதாதையர்கள் அதிரம்பாக்கத்திற்கு வந்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.
இருந்தாலும் ஒரு சந்தேகம் நீடிக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் உருவாக்கிய கல்லாயுதங்கள் அவையா? அல்லது, அதற்கு முன்பே இங்கிருந்த வேறு வகைப்பட்ட மானுடர்களா என்ற கேள்விக்கு தற்போது பதிலில்லை. ஆனால், தற்போது கருதப்படுவதைப் போலல்லாமல் 85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்க மானுடர்கள் அங்கிருந்து வெளியேறினர் என்பதை வெகு சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. இருந்தாலும், இந்தியத் துணைக்கண்டத்திற்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையில் கிடைத்த பல்வேறு உயிர் படிவங்களின் (Fossil) மரபணுக்கள் கிடைக்கும்போது மேலும் விவரங்களை நாம் நெருக்கமாகக் கூற முடியும்.
ஆனால், கீழடி, கொடுமணல், அழகன் குளம் போன்ற தொல்லியல் ஆய்வுகளை முடக்கி வைத்திருக்கும் இந்திய அரசு அதிரம்பாக்க தொல்லியல் ஆய்வினை முன்னெடுக்கவில்லை. மாறாக, தனியார் முயற்சியிலேயே அதிரம்பாக்கம் அதிர வைத்துக்கொண்டுள்ளது. தனியார்மயமாக்கம் இந்துத்துவ சார்பு இந்திய அரசின் தொன்மை ஆய்வு மறுப்பு முயற்சிகளுக்கும் ஆப்பு வைப்பதாக இருப்பது முரண் வினோதம்தான்.
============================
இப்பிரச்சனை பற்றிய ஆய்வுக் கட்டுரை Nature இதழில் ஜனவரி 31, 2018ல் வெளியாகியிருக்கிறது. (https://www.nature.com)
ஆய்வுக் கட்டுரை பற்றிய எளிய வடிவிலான கட்டுரை https://thewire.in/…/stone-tools-found-tamil-nadu-suggest-…/ என்ற முகவரியில் காணக் கிடைக்கிறது. இதனையும் எளிமைப் படுத்தி, படிக்கத் தயங்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்கும் முயற்சியே இந்தப் பதிவு.
=================================
No comments:
Post a Comment